Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் ... ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் 8ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெப்போற்சவ திருவிழா நிறைவு: தெப்பத்தில் ஸேவை சாதித்த நம்பெருமாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2012
11:03

திருச்சி: வெகு விமரிசையாக நடந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்போற்சவ திருவிழா, நேற்று முன்தினம் சிறப்புடன் நிறைவடைந்தது. "பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறு ம் 10 நாட்கள் தெப்போற்சவ திருவிழா வெகு விமரிசையாக நட ப்பது வழக்கம். இந்தாண்டு கட ந்த ஃபிப்ரவரி 25ம் தேதி தெப்போற்சவ விழா துவங்கியது. தினந்தோறும் உற்சவர் நம்பெருமாள், காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு, பல்வேறு இடங்களில் மண்டகப்படிகளை பெற்றார். உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தெப்பக்குளத்தெருவில், ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட தெப்பக்குளத்தில் நடந்த தெப்போற்சவத்துக்காக, மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் மதியம் புறப்பட்டார். வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபத் தை அடைந்த நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு சிற ப்பு திருவாராதனங்கள் நடந்தன. இரவு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் திருத்தெப்பத்தில் எழுந்தருளினார். நான்கு கரையில் திரளாக குவிந்திருந்த பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். மூன்றாவது திருவலத்தின்போது, தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு அலங்கார அமுது செய்விக்கப்பட்டது. சுற்றுகளை நிறைவு செய்து, கரை சேர்ந்த உடன், உபயதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. மேற்கு மற்றும் வடக்குவாசல் வழியாக இரவு 11.15 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தை சென்றடைந்தார். தெப்பத்திருவிழாவின் நிறைவுநாளான நேற்று மாலை, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு சிறப்பு திருவாராதனங்கள் செய்யப்பட்டன. ஒற்றை பிரபை வாகனத்தில் பந்தல் காட்சியுடன் ஸேவை சாதித்த நம்பெருமாள், இரவு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். இந்த உற்சவத்துடன் தெப்போற்சவ திருவிழா இனிதே நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், உதவி கமிஷனர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar