Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி மாரியம்மன் கோயிலில் ... நெல்லிக்குப்பம் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நெல்லிக்குப்பம் சுப்ரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அன்னதானம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
01:04

மதுரை : சதுரகிரி, சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலை செங்குத்தானது. அடிவாரத்தில் இருந்து, 12 கி.மீ., மலை உச்சியில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன.அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே, கோவிலுக்கு மலையேறி செல்ல, வனத்துறை அனுமதியளிக்கிறது.

ஆடி அமாவாசை அன்று, பக்தர்கள் அதிகம் கூடுவர்.நீண்ட சிரமத்துக்கு இடையே, சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தனியார் மடங்கள் மூலம், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி, அறநிலையத்துறை, ஏழு மடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி மறுத்தது.மடங்களில் ஊற்று நீரை சேமித்து வைத்து, சமையல் செய்து வந்தனர். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மடங்கள் பாடுபட்டு வருகின்றன. பல ஆயிரம் பேருக்கு, பசியாற்றும் சேவையை செய்கின்றனர்; குடிநீர் வழங்குகின்றனர்.மடத்தின் உழவாரப் பணியாளர்கள், கழிப்பறைகளை சுத்தம் செய்து, துாய்மையை பேணுகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு, மடங்களில் அன்னதானம் வழங்க தடை விதித்திருப்பது, பக்தர்கள், ஹிந்து அமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன் கூறியதாவது: கோவில் பகுதியில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சந்தன மகாலிங்கம் கோவிலில் அபிஷேகம் செய்யக்கூட தண்ணீர் இல்லை.

பிலாவடி கருப்பு கோவில் அருகே கிணற்றை ஆழப்படுத்த, வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.கோவில் வளாகத்தில், தனியார் ஓட்டல்கள் திறக்க அனுமதி வழங்கப்படாது. கட்டுமான பணி உட்பட முறைகேடுகள் நடக்கவில்லை. தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வந்தால், மடங்களில் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படும்.அதுவரை அறநிலையத்துறை சார்பில் கோவிலில் புளியோதரை, தயிர்சாதம், பொங்கல் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar