பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
01:04
திருப்பூர் : சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.திருப்பூர் பி.என்., ரோடு சத்ய சாய் பாபா கோவிலில், மகோற்சவ நாள் நிகழ்ச்சி, அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கியது.
ஓம்காரம், சுப்ரபாதம், நடன சங்கீர்த்தனம், கணபதி ேஹாமம் மற்றும் முக்கிய ேஹாம பூஜைகள் நடந்தன. காலை, 7:30 மணிக்கு, பிரசாந்தி கொடியேற்றமும், காலை, 11:00 மணி முதல் நாராயணசேவை எனப்படும் அன்னதானமும் நடைபெற்றது.சத்ய சாய் பக்தர் குழுவினர், அன்னதான சமையல் சேவையை மேற்கொண்டனர். மொத்தம், 2,500 பேருக்கு அன்னதானம் வழங்க, புளியோதரை, தயிர்சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் தயாரித்திருந்தனர். கோவிலில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சத்ய சாய் நிறுவனங்களின் மாவட்ட தலைவர், பொறுப்பாளர், அமைப்பாளர்கள், ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோடை வெயிலை தணிக்க, சத்ய சாய் நிறுவனங்கள் சார்பில், திருப்பூரில் ஐந்து இடங்களில், நீர்மோர் சேவையும் நடந்து வருவதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.மகோற்சவத்தை முன்னிட்டு, 23 நாட்களாக, பாலவிகாஷ் குழந்தைகள், வீடுகள் தோறும் பஜனை நடத்தினர். நேற்று மாலை, சத்ய சாய் கோவிலில், பஜனையை நிறைவு செய்தனர்.