பதிவு செய்த நாள்
04
மே
2019
01:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பயங்கரவாதிகள் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால், பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும், என, அரசின் பாதுகாப்பு துறை ஆய்வாளர், நிக்கேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசின் பாதுகாப்பு துறை ஆய்வாளர், நிக்கேஷ், நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.நேற்று (மே., 3ல்) அவர், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து, கோவில் முழுவதும் சுற்றி பார்த்து, ஆய்வு நடத்தினார்.
ஆலோசனைபின், திருத்தணி, டி.எஸ்.பி., சேகர், நகராட்சி ஆணையர், ராஜலட்சுமி, கோவில் இணை ஆணையர், ஞானசேகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில், பாதுகாப்பு ஆய்வாளர், நிக்கேஷ் பேசியதாவது:கோவில் ஊழியர்கள், அடையாள அட்டை அணியாததால், ஊழியர்கள் போல், பயங்கரவாதிகள் எளிதில் நுழைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, மலைக்கோவிலில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இங்குள்ள, சிசிடிவி கேமராவில், ஒரு நாள் பதிவு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.சோதனைபக்தர்கள், கோவில் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழி ஏற்படுத்தி, அவர்களின் பொருட்களை சோதனை செய்து தான் அனுமதிக்க வேண்டும்.மாடவீதியில் விற்கப்படும் தின்பண்டங்களை கண்டிப்பாக தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.