பதிவு செய்த நாள்
17
மே
2019
12:05
தர்மபுரி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை பிரதோஷம் வழிபாடு நடந்தது. இதையொட்டி ராஜகோபுரம் எதிரில் உள்ள பெரிய நந்திக்கு, சிறப்பு பூஜை, பாலபிஷேகம், சந்தன அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று மாலை, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள, பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடந்தன.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில் மற்றும் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.