கடலூர்: கடலூர் பாடலேசுவரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.கடலூர் பாடலீஸ் வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று (மே., 16ல்) மாலை 4:00 மணிக்கு நந்திக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்தில் வெளிபிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.