Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் ... திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு திருச்செந்தூர் கோயில் ராஜகோபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாத்தா! கோவிலை அகற்ற அறநிலையத்துறை மறுப்பு
எழுத்தின் அளவு:
செல்லாத்தா! கோவிலை அகற்ற அறநிலையத்துறை மறுப்பு

பதிவு செய்த நாள்

30 மே
2019
11:05

கிராம தேவதை கோவிலை அகற்ற, ஹிந்து அறநிலையத் துறை மறுப்பு தெரிவித்து வருவதால், சென்னை - தடா ஆறு வழிச்சாலை திட்டம் நிறைவேறுவதில், இடையூறு ஏற்பட்டுள்ளது.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, சென்னை - தடா இடையிலான, 54 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையை, 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறுவழியாக விரிவாக்கம் செய்வதற்கு, 2009ல் அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்கான பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பணிகளை பாதியில் நிறுத்தி, தனியார் நிறுவனம் ஓட்டம் பிடித்தது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் விபத்துகள், உயிர் இழப்புகள் அதிகரித்து வந்தன.

கடிதம் முதல்வர், இ.பி.எஸ்., திருப்பதிக்கு சென்றபோது, இச்சாலையின் நிலையை கவனித்தார். அடுத்த சில நாட்களில், இது குறித்து, அப்போதைய, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர், நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினார்.பிரதமரிடமும், திட்ட பணிகளை மீண்டும் துவங்குவதற்கு, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.பாரத்மாலா திட்டத்தில், இப்பணியை மேற்கொள்வதற்கு, மத்திய அரசு முடிவெடுத்து, 2018 ஜனவரியில், 296 கோடி ரூபாய் ஒதுக்கியது.இந்த நிதியை பயன்படுத்தி, தடா முதல், நல்லூர் சுங்கச்சாவடி வரை, 33 கி.மீ., சாலையை விரிவாக்கம் செய்ய, முடிவு செய்யப்பட்டது.

பணியை மேற்கொள்வதற்கு, எஸ்.பி.எல்., என்ற தனியார் நிறுவனத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேர்வு செய்தது. இந்நிறுவனம் வாயிலாக, சாலை விரிவாக்க பணிகள், மார்ச் 28ல் துவங்கப்பட்டன. சாலை பணிகளை, 2020 மார்ச், 27ல் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டது. விளக்கம் தற்போது வரை, 18 கி.மீ.,க்கு, 55 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகளை முடிப்பதற்கு குறைந்த கால அவகாசமே உள்ளது. வடகிழக்கு பருவமழை, அக்டோபரில் துவங்குவதற்கு முன், சில பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.

இந்த சாலையில், அழிஞ்சிவாக்கம் அடுத்த ஜெகனாதபுரத்தில், ஹிந்து அறநிலையத்திற்கு சொந்தமான, செல்லாத்தம்மன் கோவில் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில், ஆறு வழிச்சாலை அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோவிலை அகற்றுவதற்கு, அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது.

அதற்கு, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக, இந்த கிராம தேவதை கோவில் உள்ளது. இக்கோவிலில், தல விருட்சமாக, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேப்ப மரம் உள்ளது. கோவிலை மாற்றி அமைக்க, வேறு இடம் இல்லை.கோவிலை அகற்றக் கூடாது என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம், மக்கள் முறையிட்டுள்ளனர். எனவே, கோவிலை அகற்றாமல், மாற்றுப் பாதையில், சாலை பணியை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால், கோவில் அமைந்துள்ள பகுதியில், சாலை பணியை முடிப்பதில், இழுபறி நீடிக்கிறது.

கோவிலை மாற்றிக்கட்டுவதற்கு, தேவையான இழப்பீடு வழங்குவதற்கும், தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முன்வந்துள்ளது. ஆனாலும், அறநிலையத்துறை, அதற்கு அனுமதி வழங்கவில்லை.எனவே, இப்பிரச்னையை, முதல்வர், இ.பி.எஸ., கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு, ஆணையம் முடிவெடுத்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar