Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வைதீஸ்வரன் கோவில் தீர்த்தகுளம் மூடல்: பக்தர்கள் அவதி வைதீஸ்வரன் கோவில் தீர்த்தகுளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்டது பழநி சண்முகாநதி: குளிக்க 1வாளி தண்ணீர் ரூ.10
எழுத்தின் அளவு:
வறண்டது பழநி சண்முகாநதி: குளிக்க 1வாளி தண்ணீர் ரூ.10

பதிவு செய்த நாள்

31 மே
2019
11:05

பழநி, மழை இல்லாமல் புனித சண்முகாநதி வறண்டதால், பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடுவதற்கு ஊற்று நீரை ஒருவாளி ரூ.10 க்கு விற்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சண்முகாநதியில் குளித்துவிட்டு, அலகு குத்தி, காவடிகள் எடுத்து மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் பழநி பகுதி கோயில் திரு விழாக்களுக்கு பக்தர்கள் சண்முகாநதியில் தீர்த்தம் எடுத்து செல்கின்றனர்.தற்போது போதிய மழை இல்லாததால் சண்முகாநதி தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகள் முழுவதும் அமலச்செடிகள் படர்ந்துள்ளன. இவை ஆற்றில் உள்ள குறைந்தபட்ச தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றன. இதனால் தற்போது பழநி வரும் பக்தர்கள் சண்முகாநதியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.சிலர் நீர்பிடிப்பு பகுதியில் குழிதோண்டி ஊற்று நீரை எடுத்து ஒருவாளி ரூ.10க்கு விற்கின்றனர். கோயில் சார்பில் குளியல், கழிப்பறை வசதி செய்து தரப்பட்டாலும், ஆற்றுநீரில் குளிப்பதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். ஆகையால் சண்முகாநதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இனிவரும் மழைக்காலத்திற்கு முன்னதாக, ஆறை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும். மேலும் பக்தர்கள் வசதிக்காக குளத்துடன் படித்துறை அமைத்து நிரந்தரமாக தண்ணீரை தேக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar