பதிவு செய்த நாள்
31
மே
2019
12:05
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவை, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். நேற்று (மே.,30ல்), இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், தமிழரசு, தக்கார் வெங்கடேஷ், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை, பக்தர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் மூலம் எண்ணப்பட்டது. இதில், 40 லட்சத்து, 46 ஆயிரத்து, 905 ரூபாய், 44 கிராம் தங்கம், 130 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த பிப்., 8ல் உண்டியல் திறக்கப்பட்டபோது, 55 லட்சத்து, 960 ரூபாய், 25 கிராம் தங்கம், 102 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.