பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
01:06
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கும் புதனால் நன்மை தொடரும். மேலும் 7ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ஜூன்29 வரை ரிஷபத்தில் இருந்து சுமாரான பலனைத் தருவார். அதன் பின் அவர் மிதுனத்திற்கு மாறி நன்மை கொடுப்பார். இதனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.
குருபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என சொல்ல முடியாது. குரு1ம் இடத்தில் இருக்கும் போது கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக சொல்வதுண்டு. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வையால் யோகபலன் உண்டாகும்.
குடும்பத்தில் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
புத்தாடை, அணிகலன்கள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஜூன் 16,17,ஜூலை13,14ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணம் கிடைக்கும். ஜூன் 22,23,24ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஜூலை 8,9ல் உறவினர் வருகையும், அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். உங்கள் திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஜூலை 6,7ல் எதிர்பாராத நற்பலன் உண்டாகும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். ஜூன் 29க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. பொருட்கள் களவு போகலாம். ஜூன்29 க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். ஜூன்18,19,ஜூலை10,11,12,15,16ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன் 27,28,29ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை ஜூன்29க்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் முடிவு சாதகமாக அமையும். ஜூன்25,26ல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்கவும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். குருவின் பார்வையால் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். ஜூன்20,21ல் அனுகூலமான பலன் ஏற்படும். ஜூன்30, ஜூலை1ல் விருந்து, விழா என செல்வீர்கள். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் ஜூன் 24க்கு பிறகு மறையும்.
* நல்ல நாள்: ஜூன்16,17,20,21,27,28,29,30 ஜூலை 1,6,7,8,9,13,14
* கவன நாள்: ஜூலை 2,3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்:பச்சை, வெள்ளை
பரிகாரம்:
● ஞாயிறன்று சூரியனுக்கு கோதுமை தானம்
● சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
● வெள்ளியன்று சுக்கிரனுக்கு நெய் தீபம்