மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஜூன்., 26ல்) சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 1:00 மணிக்கு மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.