Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எண்ணுார் சிவா -- விஷ்ணு கோவில் ... குவியுது கூட்டம்: நள்ளிரவிலும் அத்திவரதர் தரிசனம் செய்ய அனுமதி குவியுது கூட்டம்: நள்ளிரவிலும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழா: நாளை திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழா: நாளை திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2019
03:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பரமதத்தன் புனிதவதியார் திருக்கல்யாண உற்சவம் நாளை நடைபெறுகிறது.

காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மாங்கனித் திருவிழா இன்று (13ம் தேதி) மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

நாளை (14ம் தேதி) காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் 15ம் தேதி மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவபெருமான் பிச்சாண்டவர் மூர்த்தியாக வீதி உலா நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் மாங்கனிகள் வீசும் நிகழ்ச்சி நடக்கும். பிரசித்தி பெற்ற திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்கள் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும் சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் பாரதியார் சாலை. கன்னடியர் வீதி. பெருமாள் கோவில் வீதி. திருநள்ளாறு சாலை சந்திப்பில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாங்கனித் திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வா தலைமையில் எஸ்.பி. மாரிமுத்து. வீரவல்லபன் ஆகியோர் மாங்கனி பாதுகாப்பு குறித்து நேற்று அம்மையார் கோவில் கலையரங்கில் போலீஸாருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar