ஆனைமலை : ஆனைமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகேயுள்ள, வாசவி மஹாலில் நேற்று, ஆரிய வைஸ்ய மகா ஜனங்கள் சங்கம் சார்பில், அத்திவரதர் விஸ்வரூப தரிசனம் நடத்தப்பட்டது. முன்னதாக, மஹால் அருகிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டது. முருகனுக்கு கிருத்திகை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு உறியடித்தனர். அதன்பின், மகா சுதர்சன ஹோமம், கணபதி ஹோமம், புன்யாவாகனம் நடந்தது. அத்திவரதர் விஸ்வரூப தரிசனம் துவங்கியது. அத்திவரதர் அனந்தசயன கோலத்திலும், திருநின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹாலில் வைக்கப்பட்ட கருடாழ்வாரை பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.