Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆர்.எஸ்.மங்கலம் அய்யனார் கோவில் ... ஓசூரில் ஐயப்ப ரத யாத்திரை துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சமலையில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தனி சன்னதி கட்டுமான பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2019
05:09

கோபி: கோபி, பச்சமலை முருகன் கோவிலில், நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு தனியாக சன்னதி கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

கோபி அருகே பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கடந்த, 1981, 2006 என கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனால், ஆகம விதிப்படி, 2020ல், மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, உபயதாரர் நிதி மூலம், கடந்த சில மாதங்களாக பல்வேறு திருப்பணி நடக்கிறது.

கோவிலின் சிவன் சன்னதி மண்டபத்தில், 16 லட்சம் ரூபாயில் அழகுபடுத்தும் பணி, கோபுர ங்கள் கட்டுமான பணி நடக்கிறது. அர்த்த மண்டப வளாகத்தில், தேக்கு மர கனக சபையில் அருள் பாலிக்கும் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு தனியாக சன்னதி கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதி அருகே இடம் தேர்வு செய்து உபயதாரர் நிதியாக, 32 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஏப்.,22ல், பூமி பூஜையுடன் கட்டமைப்பு பணி துவங்கியது.

மலைப்பாதையின், வடகிழக்கு பகுதியில் பாறைகளை உடைத்து, அஸ்திவாரம் கட்டப்பட்டது. பின், அதிலிருந்து கருங்கற்களை அடுக்கி தற்போது, 38 அடி உயரத்துக்கு கான்கிரீட் கட்ட மைப்பு பணி நடக்கிறது. இதற்காக, டி.என்.,பாளையத்தில் இருந்து கருங்கற்கள் கொண்டு வரப்படுகின்றன.

மலைக்கோவிலின் நிலமட்டம் வரை மொத்தம், 42 அடி உயரத்துக்கு அஸ்திவாரம் கட்ட மைப்பு முடிந்தபின், அதன்மீது பிரதான கோவில் கட்டமைப்பு பணி துவங்கவுள்ளது. 12 அடி நீளத்தில், 16 அடி அகலத்தில், 13 அடி உயரத்தில், சன்னதி கட்டுமான பணிகள் துவங்கவுள்ளது. இப்பணிகள் அனைத்தும், நடப்பாண்டு இறுதிக்குள் முடித்து, 2020ல், மூன்றாவது கும்பாபிஷே கம் நடத்த, அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar