Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் ... கோயில் கோபுரத்தில் வளரும் செடிகள் கோயில் கோபுரத்தில் வளரும் செடிகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலை வீதியை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்
எழுத்தின் அளவு:
மயிலை வீதியை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்

பதிவு செய்த நாள்

20 செப்
2019
11:09

மயிலாப்பூர்: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, மயிலாப்பூர் மாட வீதிகளில், விதவிதமான பொம்மைகள், விற்பனைக்கு வந்துள்ளன.

முப்பெரும் தேவியரை வழிபடும், நவராத்திரி விழா, 29ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு, கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவிற்காக, மயிலாப்பூர் மாடவீதிகளின் நடைபாதைகளில், பொம்மை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிசை தொழிலாக பொம்மைகள் செய்து, வர்ணம் தீட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ள கொலு பொம்மைகள், மிக அழகாக காட்சியளிக்கின்றன.

முப்பெரும் தேவியர், பெருமாள், காளி போன்ற சுவாமி பொம்மைகளுடன், பல கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன், குறத்தி போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் பொம்மைகள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள், ரோபோ பொம்மைகளும் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களது பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளன.

கொலு பொம்மைகள் விற்பனை குறித்து, நவராத்திரி நடைபாதை மண்பொம்மை வியாபாரிகள் சங்க செயலர், அசோக்குமார் கூறியதாவது:இந்தாண்டு, அத்தி வரதர் பொம்மை தான் புதுமை. அதை, பலர் வாங்கிச் செல்வதுடன், சந்திரயான் - 2 பொம்மையை, கேட்டு வருகின்றனர். மாடவீதிகளில், 60 ஆண்டுகளாக கடை அமைத்து வருகிறோம். இந்த பகுதியில், எங்கள் சங்கம் மூலம், 85க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாருக்கும், எந்த வித இடையூறும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு, அடையாள அட்டை வழங்கியுள்ளோம்.

காஞ்சிபுரம், கடலுார், பண்ருட்டி போன்ற பகுதிகளில், குடிசை தொழிலாக செய்யப்பட்ட பொம்மைகளை, விற்பனைக்கு வைத்து உள்ளோம். இங்கு, 10 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரை, பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், எங்களிடம் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். வெளிநாடுகளுக்கும், இங்கிருந்து பொம்மைகள் வாங்கி, சிலர் அனுப்புவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar