பதிவு செய்த நாள்
11
அக்
2019
12:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல்களில், பக்தர்களின் காணிக்கையாக, 23.71 லட்சம் ரூபாய் கிடைத்து உள்ளது.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி, நேற்று, கோவிலில் உள்ள, 12 உண்டியல்களில், மூன்று உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் உண்டியல்கள், காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகா தேவி, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில், சென்னையை சேர்ந்த ஆலயம் நற்பணி சங்கத்தினர், காணிக்கையை எண்ணினர். அதில், 23.71 லட்சம் ரூபாய், 132 கிராம் தங்கம், 1,350 கிராம் வெள்ளி கிடைத்தன.