பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
செஞ்சி : செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.குருபகவான் நாளை ( 29 ம் தேதி) காலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். இதை முன்னிட்டு நாளை செஞ்சி காமாட்சி அம்மன் சமேத ஏகாம் பரேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிஷேகமும், அதிகாலை 3.49 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.தொடர்ந்து குரு பெயர்ச்சியால் பயன்பெறும் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிகளுக்கும், குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கும் சிறப்பு அர்ச்சனை செய்ய உள்ளனர்.