ஸ்ரீவில்லி புத்தூர்: சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக சதுரகிரி மலைக்கு சென்ற பக்தர்கள் 50 பேர் மலைபகுதிகளில் சிக்கி கொண்டனர். 5 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து சதுரகிரி மலை பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.