பதிவு செய்த நாள்
13
டிச
2019
05:12
விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரனும், குருவும் நற்பலன் கொடுப்பர். மற்ற கிரகங்களால் நன்மை தர இயலாது. குருவின் பலத்தால் பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். சனிபகவானின் 10ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
புதனால் ஏற்பட்ட பிரச்னை, உறவினர் கருத்துவேறுபாடு, பொருள் இழப்பு முதலியன டிச.21க்கு பிறகு மறையும். அதன் பிறகு சகோதரிகள் உறுதுணையாக செயல்படுவர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். டிச. 29,30ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் திருப்தி கிடைக்கும். மின்சாரம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட வீண் அலைச்சல், சோர்வு முதலியன மறையும். அவரால் பணம் விரயமாகும். சிலருக்கு கண் தொடர்பான உபாதை வரலாம். செவ்வாயால் ஏற்பட்ட பித்தம், மயக்கம் போன்றவை டிச.28க்கு பிறகு மறையும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
* ஐ.டி., துறையினருக்கு மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். அலைச்சல், வேலைபளு மறையும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனடைவர். பெண்களால் உயர்வுநிலை பெறுவர்.
* கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகபெண் கலைஞர்கள் உதவி கரம் நீட்டுவர்.
* பள்ளி, கல்லூரி மாணவர்கள் குருவால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
* வியாபாரிகள் மறைமுகப் போட்டியில் பிரச்னையை சந்திக்கலாம். வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்க வைக்க வேண்டியதிருக்கும்
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு திடீர் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
* மருத்துவர்கள் சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* வக்கீல்கள் முயற்சிகளில் தடை களைச் சந்திக்கலாம். அதைச் செய்து முடிக்க பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.
* ஆசிரியர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன டிச.21 க்கு பிறகு மறையும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றத்தைச் சந்திப்பர். பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரியிடம் அனுசரித்து போகவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். அலைச்சலும். வேலைப்பளுவும் தவிர்க்க முடியாவிட்டாலும் அதற்குரிய பலன் கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு முயற்சியில் தடை குறுக்கிடும். மனம், உடற்சோர்வும் ஏற்படும்.
* விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.
* நல்ல நாள்:
டிச.17,18,19, 20,24,25,28,29, ஜன.4,5,6,7,8,14
* கவன நாள்: ஜன.9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,4
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
● தினமும் காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்