Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்ச் 8 ல் மாமல்லபுரம்தெப்ப உற்சவம் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

02 மார்
2020
10:03

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல், கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, பிப்., 6ல், மண்டலாபிஷேக மண்டகப்படி நிகழ்ச்சிகள் துவங்கின.

நேற்று முன்தினம் மாலை, மண்டலாபிஷேக பூர்த்திக்கான முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. நடராஜர் சன்னிதி முன், யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பெருவுடையார், பெரியநாயகி அம்மன்களுக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு, சிவாச்சாரியார்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.காலை, 8:30 - 9:00 மணிக்குள், மூல மூர்த்திகளுக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட்டு, கடத்தில் கொண்டு வந்த புனித நீர் ஊற்றப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.நாட்கள் குறைப்புமொத்தம், 48 நாட்கள் நடக்க வேண்டிய, மண்டலாபிஷேகம், சித்திரை பிரம்மோற்சவ விழாவிற்காக, 24 நாட்களாக குறைக்கப்பட்டது. மண்டலாபிஷேகம் பூர்த்தியான நிலையில், மீதமுள்ள, 24 நாட்களும் மூல மூர்த்திகளுக்கு பால், எண்ணெய் அபிஷேகம் மட்டும் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்படும், என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். மண்டலாபிஷேக நாட்களில், சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar