Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை ... திருவண்ணாமலையில் இரவில் பக்தர்கள் கிரிவலம்: தடுத்து நிறுத்தும் போலீசார் திருவண்ணாமலையில் இரவில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்த சலுகை உண்டா?
எழுத்தின் அளவு:
கோவில் வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்த சலுகை உண்டா?

பதிவு செய்த நாள்

25 மே
2020
03:05

சென்னை : கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நேர்மையான வாடகைதாரர்களுக்கு, வாடகை செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, தொழில், வருமானம் இழந்து, ஏராளமான நடுத்தர, கீழ்தட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக வாடகை கொடுக்காததால், பலர் வீட்டை காலி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.வாடகை வீடுகளில் குடியிருப்போர், வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை, அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.அதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகை தொகையை, இரண்டு மாதங்கள் கழித்து பெற்று கொள்ள வேண்டும் என, வீட்டு உரிமையாளர்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, வாடகை செலுத்துவதற்கான சலுகை அறிவிக்கப்படவில்லை. இது குறித்து, சமூக நல விரும்பிகள் கூறியதாவது: தனியார் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர், இரண்டு மாதங்கள் கழித்து வாடகை செலுத்தலாம் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அறநிலையத்துறை கட்டடங்களில், பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கான வாடகை செலுத்தும் சலுகை, இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனவே, இதுவரை நேர்மை தவறாமல், உரிய காலகட்டத்தில் வாடகை செலுத்தி வரும் குடியிருப்பு வாசிகள் பலர், ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்காவது வாடகை செலுத்துவதில், சலுகை காட்ட வேண்டும். இதுதொடர்பாக, அறநிலையத்துறை உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar