பதிவு செய்த நாள்
14
ஜூலை
2020
02:07
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!
சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற கிரகங்களின் பாதிப்புகளை அவர்கள் உடைத்தெறிவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். சுக்கிரன் ஜூலை 30 வரை நன்மை தர உள்ளார். குடும்பத்தில் சுக்கிரனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதன் ஜூலை 26 வரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் இருந்து முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்தலாம். அதன் பின் அவர் உங்கள் ராசிக்கு மாறுகிறார். இந்த மாற்றம் உகந்ததல்ல. இதனால் குடும்பத்தில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். செவ்வாயால் ஆக.12க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் குதுாகலமாக இருப்பர். உங்கள் ஆற்றல் மேம்படும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஜூலை 30 வரை சிறப்பான பலனை காணலாம். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி பெருகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும் சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். உடல்நலம் சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செவ்வாயால் ஆக. 12க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆற்றல் மேம்படும். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
* வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
* தரகு,கமிஷன் தொழிலில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
* ஐ.டி., துறையினருக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* மருத்துவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் வெற்றி காண்பர். சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
* பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.
* விவசாயிகள் மகசூல் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு, கொள்ளு, கோதுமை மூலம் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆக.12 க்கு பிறகு பகைவர் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்
* அரசு பணியாளர்கள் ஆக.12க்கு பிறகு வேலையில் கவனமாக இருக்கவும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.
* தனியார் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சலுகைக்கு தடையிருக்காது. சிலர் இடமாற்றத்தை காண வாய்ப்புண்டு.
* ஆசிரியர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.
* அரசியல்வாதிகள் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். பண விஷயத்தில் கவனம் தேவை.
* கலைஞர்களுக்கு ஜூலை 30க்கு பிறகு முயற்சியில் தடை, பண நஷ்டம் ஏற்படலாம்.
* விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களிடம் அறிவுரை கேட்கவும்.
நல்ல நாள்: ஜூலை16,17,18,21,22,25,26,31 ஆகஸ்டு 1,2,3,4,10,11,12,13,14.
கவன நாள்: ஆக. 5,6 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, கருப்பு.
பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* வெள்ளியன்று லட்சுமி தாயாருக்கு தீபம்
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு