பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
குரு, சுக்கிரன் மட்டுமே நற்பலனை தரும் நிலையில் இருக்கிறார்கள். முயற்சியில் இருந்த தடை, பொருள் நஷ்டம் முதலியன செப். 28க்கு பிறகு மறையும். அதன் பிறகு பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். குருவால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர்களால் நன்மை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.
புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அனாவசிய விவாதத்தை தவிர்க்கவும். சனியால் மனைவி, மக்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும். குருவால் குடும்பத்தில் குதுாகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். செப்.28 க்கு பிறகு சகோதரிகளால் முன்னேற்றம் பெறலாம். அவர்களால் பண உதவி கிடைக்கும்.
குரு, சுக்கிரன் சிறப்பாக அமைந்து உள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு மறையும். ஆனால் இந்த மாதம் அவரால் பொருள் விரயம் ஏற்படலாம். கண் வலி வரலாம். வயிறு பிரச்னைவரும். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். செப்.28க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
* வியாபாரிகள் புதிய உத்திகளால் ஆதாயம் அடைவர். தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு செப். 28க்கு பிறகு, சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* ஐ.டி., துறையினருக்கு செப். 28க்கு பிறகு சுக்கிரனால் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* ஆசிரியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு செப். 28க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.
* விவசாயிகள் உழைப்பிற்கேற்ப நற்பலன் கிடைக்கப் பெறுவர். காய்கறி, பழவகைகள், மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு செப்.21க்கு பிறகு அரசு வகையில் பிரச்னை குறுக்கிடலாம். அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* வியாபாரிகள் புதிய முயற்சிக்காக அதிக முதலீடு செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கவனம் தேவை.
* தரகு, கமிஷன் தொழிலில் பண விரயம் ஆகலாம். கூட்டாளிகளின் வகையில் தொல்லை வரும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சிலருக்கு கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்
* மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
* வக்கீல்கள் சுதந்திரமற்ற நிலையில் இருப்பர். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
* அரசு பணியாளர்கள் செப்.21 – அக்.7 வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். அதன்பிறகு உங்களுக்கு பிற்போக்கான நிலை மறையும்.
* போலீஸ், ராணுவத்தினர் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
* அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். ராகுவால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறை சந்திக்கலாம்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.
* மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
நல்ல நாள்: செப். 17,20,21,26,27,28,29,30 அக். 6,7,8,9,10,13,14
கவன நாள் அக்டோபர் 1,2 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:2,4. நிறம்: மஞ்சள், வெள்ளை.
பரிகாரம்:
* சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரக வழிபாடு
* சனிக்கிழமைதோறும் சனி பகவானை எள்தீபம்
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்