பதிவு செய்த நாள்
16
செப்
2020
08:09
இந்த மாதம் புதன் செப்.20 வரையும் அக்.7க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். அதோடு செவ்வாய், குரு, சனி மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். செவ்வாயால் பக்தி எண்ணம் மேலோங்கும். எடுத்த செயல் அனைத்திலும் வெற்றி காணலாம். வசதி வாய்ப்புகள் பெருகும். சனி, குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். செப்.21 – அக்.7 வரை குழப்பம் நிலவும். கணவன், மனைவி இடையே சில மனக்கசப்புகள் வரலாம்.
பெண்களுக்கு சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். கணவர், குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்கள் செயல்பாடுகளால் குடும்பம் சிறப்படையும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். தோழிகளால் நன்மை ஏற்படும். அவர்களின் ஒத்துழைப்பால் நிம்மதி காண்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பெண் பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். செப். 21 – அக்.7 வரை வெளியுலகில் பெருமையாக பேசப்பட்டாலும் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
கடந்த மாதம் சூரியனால் இருந்த அலைச்சல், அவப்பெயர், வயிறு தொடர்பான உபாதைகள் இந்த மாதம் இருக்காது. கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பகைவர் தொல்லை மறையும்.
* வியாபாரிகள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கப் பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும்.
* மருத்துவர்களுக்கு அலைச்சல், வேலைப்பளு குறையும். உங்கள் திறமைக்கேற்ப மரியாதை கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* வக்கீல்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடையிருக்காது.
* போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
* விவசாயிகள் சீரான நிலையில் இருப்பர். பாசிப்பயறு, எள், துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், காய்கறி, கீரை வகைகள், பழ வகைகள் மூலம் அதிக மகசூல் காண்பர்.
* மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக இருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டியில் வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* அரசு பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் செப்.20க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு செப்.21 – அக்.7 வரை வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* ஐ.டி., துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு செப்.21 – அக்.7 வரை புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
* கலைஞர்களுக்கு செப்.28 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
* மாணவர்கள் செப்.21 – அக். 7 வரை சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம் கவனம்.
நல்ல நாள்: செப். 17,22,23,24,25,29,30 அக். 3,4,5,11,12,13,14.
கவன நாள்: செப்.18,19 அக்.15,16 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: சிவப்பு, மஞ்சள்.
பரிகாரம்:
* ஞாயிறன்று சூரியபகவானுக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று லட்சுமி தாயார் வழிபாடு
* சனிக்கிழமைகளில் கிருஷ்ணர் தரிசனம்