Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமத்தம்பட்டி முருகன் கோவில்களில் ... திருநள்ளாறு கோவில் சரஸ்வதி தீர்த்தக் குளம் தூய்மைப்படுத்தும் பணி திருநள்ளாறு கோவில் சரஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்.,
எழுத்தின் அளவு:
தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்.,

பதிவு செய்த நாள்

23 நவ
2020
03:11

மயிலாடுதுறை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவக்கி உள்ளார். வெற்றி கிடைக்க வேண்டி அவர் தருமபுரம் ஆதீன மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றார். மாநில அரசின் கெடுபிடிகளை தாண்டி உதயநிதி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். கொரோனா இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என இவரது பிரசாரத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் பிரசாரம் செய்தே தீருவேன் என வேனில் சென்றதால் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் உதயநிதி, பிரசாரத்திற்கு இடையே, நேற்று (21 ம் தேதி) இரவில் , மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

கருணாநிதியும் சென்ற மடம்: 1972-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது மறைந்த கருணாநிதி, தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு குருமகாசன்னிதானம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar