Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்கள், அதன் வரலாறு, சிறப்புகள் ... விழுப்புரம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறந்தது பக்தி தழைத்தோங்கும் மார்கழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2020
05:12

இறைவழிபாட்டின் காலமாக கருதப்படும், மார்கழி மாதம் நேற்று பிறந்தது. இதையடுத்து, அதிகாலையில், வீடுகளில் பொங்கல் படைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என, பகவான் கிருஷ்ணர், மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறியிருக்கிறார்.அதேபோல், மார்கழி மாதம், ஆன்மிகத்தில், தேவர்களுக்கான அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுதும் இறை வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மார்கழி, தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, வாசலில் வர்ணக் கோலமிட்டு, இம்மாதம் முழுதும் இறைவழிபாடு செய்வது வழக்கம்.இம்மாதத்தில், ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் உள்ளது. மேலும், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு அதிகமாக இருக்கும். எனவே, சுத்தமான காற்றை சுவாசித்து, உடல்நலனை காக்கும் பொருட்டு, அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

மார்கழி மாத, அதிகாலை இறை வழிபாடு குறித்து, மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.மார்கழி மாதம் கோவில்களில், அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, விநாயகர் சஷ்டி விரதம் ஆகியவை, இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்கழி முதல் நாளான நேற்று, சென்னை, புறநகரில் பெரும்பாலான இடங்களில் பஜனைகள் நடத்தப்படவில்லை.மார்கழி முதல் நாளான நேற்று, பலர் தங்கள் வீடுகளில் வர்ணக் கோலமிட்டு, பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர்.

குரோம்பேட்டையில், மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில், ஏழாம் ஆண்டு, பஜனை நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. நாகரிக உலகில், அவை மெல்ல மறைந்தாலும், சில இடங்களில், பஜனைகளுக்கு இன்னமும், முத்தோர் புத்துயிர் கொடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்டோர், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் போன்ற பாடல்களை, அதிகாலை, 5:30 முதல் 7:00 மணி வரை, பாடியபடி, வீதி உலா வருகின்றனர்.அவர்களின் ஆன்மிக பாடல்கள், அதிகாலையில் மக்களை எழுப்பி விடுகின்றன

- நமது நிருபர் - .

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar