உசிலம்பட்டி கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2021 12:04
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகாசிவராத்திரி திருவிழவில் கருமாத்தூர் பொன்னாங்கன், கலியுகசிதம்பர ஈஸ்வரர், பேச்சிவிரும்மன், ஆரியபட்டி கல்யாண கருப்பசாமி கோயில்களில் வசூலான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் லட்சுமிபிரியா முன்னிலையில் நடைபெற்றது. காணிக்கைகளை எண்ணி அந்தந்த கோயில் கணக்கில் வரவு வைக்க உள்ளனர்.