Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆடிப் பண்டிகை: சூலூர் அம்மன் ... காரைக்கால் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா: காவிரி தாயை வழிபட்டனர் காரைக்கால் அரசலாற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் சீதளிக்குளத்தில் ஆடிப்பெருக்கு விழா
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் சீதளிக்குளத்தில் ஆடிப்பெருக்கு விழா

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
04:08

திருப்புத்துார்: திருப்புத்துார் சீதளி தெப்பக்குளபடித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று தம்பதியர் பலரும் பிரார்த்திக்கு தாலிப் பெருக்கி கட்டினர்.

திருப்புத்துார் வழி செல்லும் பாலாறு,விருசுழியாற்றின் நீர் வரத்தால் பெருகுவது சீதளி தெப்பக்குளம்.  இக்குளத்தின் கிழக்கு திசை பிராமணப்படித்துறையில் நேற்று காலை முதல் புதுமணத்தம்பதியர் மட்டுமின்றி திருமணமாகி பல ஆண்டுகளாகிய தம்பதியர் பலரும் வந்தனர். படித்துறையில் மஞ்சள் நீரால் கழுவி, வாழை இலை விரித்து மங்கள பொருட்கள், பூஜை பொருட்கள், பழங்கள், மஞ்சள் கயிறு சந்தனம்,குங்கும்,திருநீறு வைத்து தீபம்

ஏற்றி பிரார்த்தித்தனர். பின்னர் புதுமணத்தம்பதியர்களுக்கு தாலிக் கயிற்றை பிரித்து புதுமஞ்சள் கயிறு சேர்ந்து பெரியவர்கள் எடுத்து கொடுத்து தாலிப்பெருக்கி கட்டினர்.பலர் குழந்தைகளுடன்  குடும்பமாகவும் வந்து பிரார்த்தித்தனர். கருணாம்பிகை கணேசன் என்பவர் கூறுகையில்,‛  நாங்கள் திருமணமான ஆண்டு முதல் வந்து சீதளி தீர்த்தத்தை ஆடிப் பெருக்கு அன்று  பிரார்த்தித்து வருகிறோம். குழந்தைகளுடன் வந்து அவர்களையும் நமக்கு வாழ்க்கையில் இன்றியமையாத நீரை பிரார்த்திக்க வைத்து, அதன் பின்னர் வீட்டிற்கு சென்று பூஜையறையில் தாலிப்பெருக்கிக் கட்டுவோம். இது மனதிற்கு நிறைவாகவும், மகிழ்ச்சியையும் தருகிறது. ’ என்றார். கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால். கோவில் ராஜகோபுர வாசலில் நின்று வணங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar