Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசிவிஸ்வநாதன் கோயில் ... மேட்டுப்பாளையம் சிறுமுகையில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் குருபெயர்ச்சிக்காக சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் குருபெயர்ச்சிக்காக சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

15 நவ
2021
03:11

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி ேஹாம அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி கணபதி பூஜை, நவக்கிரக ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி குருபகவானை வழிபாடு செய்தனர். திப்பம்பட்டி ஸ்ரீ மும்மூர்த்தி ஆண்டவர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில், குருபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைகுருபகவான் ஆண்டுக்கு ஒரு முறையும், சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறையும், ராகு, கேது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையும், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வர். இந்த ஆண்டு நவகிரகங்களின் குருபகவான் மகர ராசியிலிருந்து, கும்பராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.இதனையடுத்து, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குருபெயர்ச்சி யாகம் நடந்தது. குருபகவானுக்கு, சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு யாக பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், குருபெயர்ச்சியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. குரு பகவானுக்கு, சிறப்பு ேஹாமம், சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, முல்லைப்பூ, நல்லெண்ணெய், தேங்காய், பழம் ஆகிய பரிகார பொருட்களை சமர்ப்பித்து, பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar