Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்யாணிபுரம் கோயிலில் ... நாளை ஷீரடி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொரிமுத்து அய்யனார் கோயிலில் மழைவேண்டி பூஜை நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
11:07

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால் மழை வேண்டி பொதுப்பணித்துறையினர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் விசேஷ பூஜை நடத்த முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜூன் 1ம் தேதி துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்தாண்டில் பொய்த்து போனதால் நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லாமல் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18ம் தேதி 22.40 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் மாவட்டத்தின் பல்வேறு தேவைக்கு அணையிலிருந்து அவ்வப்போது தண்ணீர் எடுத்த நிலையில் சுமார் 12 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 31.90 அடியாகவும், நேற்று 31.70 அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 112.96 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 229 கனஅடி நீர் வெளியேறியது. நேற்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 50.33 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.34 அடியாகவும் இருந்தது. இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடிய பருவம் தவறிக் கொண்டிருப்பதால் மழை பெய்ய வேண்டி பொதுப்பணித்துறை காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் விசேஷ பூஜை நடத்த முன்வர வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar