Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தகவல் ... சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்: நீலிமலைப்பாதையில் பக்தர்கள் தங்க அனுமதி சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

11 டிச
2021
10:12

சபரிமலை : சபரிமலையில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிச.9 அன்று அதிகளவில் பக்தர்கள் வந்ததாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட கேரளாவின் பல பகுதிகளில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நாட்களும் முன்பதிவு முடிந்து விட்டது. முன்பதிவு செய்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வருவதில்லை. தொடக்கத்தில் வராதவர்கள் அதிகம் இருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.டிச.9 அன்று அதிக பட்சமாக, 36 ஆயிரத்து 279 பேர் தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் வரை, 5 லட்சத்து 65 ஆயிரத்து 102 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில், 4 லட்சத்து 31 ஆயிரத்து 771 பேர் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அதிகாலை 4:45 மணி முதல் தரிசனம் செய்ய அனுமதித்த நிலையில் தற்போது அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்தது முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.காலை நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கும் வரை அன்னதான மண்டபத்தில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்குவது இறுதி கட்ட பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பான அறிக்கை பத்தணந்திட்டை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சபரிமலை சன்னிதானத்தில் நேற்று கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்து, பாத்திர கடைகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக வியாபாரிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar