Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் யோகா குரு ... சாரதா சேவா சங்கம் சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வகுப்பு சாரதா சேவா சங்கம் சார்பில் விஷ்ணு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

21 மார்
2022
03:03

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் முருகப்பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. நாளை (மார்ச் 22) காலை தேரோட்டம் நடக்கிறது. பெற்றோருக்கு வரவேற்பு: பங்குனி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அபிஷேகம் முடிந்து திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை சுப்பிரமணிய சுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.

திருக்கல்யாணம்: கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் முதலில் பிரியாவிடை சுந்தரேஸ்வரர் அடுத்ததாக மீனாட்சி அம்மன் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர்‌. தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. திருமாங்கல்ய பூஜைக்கு பின்பு சுவாமிகளுக்கு புத்தாடைகள் அறிவிக்கப்பட்டன. மாப்பிள்ளை பிரதிநிதியாக சங்கர் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக ரமேஷ் சிவாச்சாரியார் மாலை மாற்றி திருமண சம்பிரதாயங்கள் நடத்தினர். சுப்ரமணிய சுவாமிக்கு வெண் பட்டு, தெய்வானைக்கு ரோஸ் பட்டு சாத்துகுடியானது. மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் மதியம் 12:45 மணிக்கு நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்தபின்பு தீபாராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar