Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. ... துலாம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023.. ஏற்றம் தரும் காலம் துலாம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023.. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
கன்னி : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 .. நல்லகாலம் பொறந்தாச்சு
எழுத்தின் அளவு:
கன்னி : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 .. நல்லகாலம் பொறந்தாச்சு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
02:04

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதம்: நல்லகாலம் பொறந்தாச்சு

வித்யா காரகனான புதனை ராசி நாதனாகவும், ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டதால் எல்லாம் தெரிந்தவராகவும் அதன் வழியே செல்வாக்கு பெற்றவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்கள். பொதுவாகவே எல்லா பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வலிமை கொண்ட உங்களுக்கு சமீப காலம் நெருக்கடியான காலமாகவே இருந்திருக்கும். பல வகையிலும் சங்கடங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். ஆறாமிடத்து குரு ஒரு பக்கம் உங்களைத் தடுமாற வைத்திருப்பார். பூர்வ புண்ணிய ஸ்தானத்து சனி மறுபக்கம் பிள்ளைகள் வழியிலும் பரம்பரை சொத்துகள் வகையிலும் சங்கடங்களை உருவாக்கி இருப்பார். இந்த நிலையில்தான் 2022 ஏப்.13ல் உங்களின் சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி அங்கே ஆட்சி பெற்று உங்களுக்கு நன்மைகளை வழங்கப் போகிறார் குரு. அவரைத் தொடர்ந்து 2022 மே25ல் சனி வக்ரகதியை அடைவதும் உங்களுக்கு நன்மையான நிலை என்றே சொல்ல வேண்டும். இதுநாள் வரையில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்கள் வாழ்வில் இனி திருப்புமுனை உண்டாகி நன்மைகள் உண்டாகப் போகிறது.

நிதி: குரு 7ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரித்து உங்களின் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் இதுவரை தடைபட்ட வருமானம் இனி வர ஆரம்பிக்கும். உங்கள் வாழ்வில் இது குறிப்பிடத்தக்க காலமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கமிஷன் வரவு உங்களை ஆச்சரியப்பட வைக்கும். உங்கள் வாக்கு வன்மையாலும் வருவாய் உண்டாகும். முதலீடுகளில் இருந்து திருப்திகரமான வருமானம் உண்டாகும். பல வழிகளிலும் பணம் வரும் காலமாக இக்காலம் இருக்கும் என்பதால் இதுவரை உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கி வந்த கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். புதிய முதலீடுகளுக்காக நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.

குடும்பம்: உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்களின் செல்வாக்கு, உங்கள் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக நீங்கள் மாறுவீர்கள். குடும்ப நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். வீட்டில் மங்கல ஒசை கேட்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். ஒருசிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள் என்றாலும் 5 ல் சஞ்சரிக்கும் சனியால் பிள்ளைகள் வழியாக நிம்மதியற்ற நிலை உருவாகும்.  அவர்களின் போக்கினால் உங்கள் மனம் அவதியுறும். பூர்வீக சொத்துகளிலும் ஒரு முடிவு வராமல் இழுபறியாகும். 11ம் இடத்தைப் பார்க்கும் குரு புதிய நட்பை வழங்கி உங்களை மகிழ வைத்தாலும் அதன் வழியே பிரச்னைகளையும் சந்திக்க நேரலாம்.

கல்வி: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதற்கேற்ப இக்காலத்தில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தடைகள், சங்கடங்கள் என்றிருந்த நிலை மாறி உங்கள் புத்தி சாதுரியத்தாலும் அறிவாற்றலாலும் மேன்மை காண்பீர்கள். காமர்ஸ், அக்கவுன்டன்சி, வங்கியியல், கல்வியியல், அறிவியல் பாடங்களில் வெற்றி காண்பீர்கள். 12ம் வகுப்பு  மாணவர்கள் நினைத்த இலக்கை அடைவதுடன் விரும்பிய கல்லுாரியில் சேர்வார்கள். அரசுப் பணிகளுக்குரிய தேர்வுகளில் கவனம் செலுத்தினால் முதன்மை பெறுவர்.

பெண்கள்: ஒரு பக்கம் குரு உங்களுக்கு நன்மைகளை வழங்கி உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கினாலும் மறுபக்கம் குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும், குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதும் குடும்ப வழியில் நிம்மதியற்ற நிலையை உருவாக்கும். 5 ல் சஞ்சரிக்கும் சனி பிள்ளைகள் வழியே நிம்மதியற்ற நிலையை உருவாக்கி  சங்கடம் ஏற்படுத்துவார். பெற்றோர் வழியிலும் ஆதரவு இருக்காது என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழியாகவும் நட்புகளின் வழியாகவும் நன்மை அடைவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்தேறும். கணவரை இழந்தவர்களுக்கு இக்காலத்தில் மறுமணம் உண்டாகும்.

உடல்நிலை:  8ல் சஞ்சரிக்கும் ராகுவும், 2 ல் சஞ்சரிக்கும் கேதுவும்  உடல் நிலையில் பாதிப்பை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். வயிறு, இடுப்பு, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், மறைவு ஸ்தானத்தில் பாதிப்புகள் என்று உங்களை வாட்ட ஆரம்பிக்கும். சிலருக்கு பருவ மாற்றத்தால் உண்டாகும் நோய்களாவது வரும் என்றாலும் குரு பார்வையால் நோயில் இருந்து மீண்டு விடுவீர்கள். உணவில் கவனம் தேவை. சரியான நேரத்தில் ஓய்வு, உறக்கம் என பழக்கப் படுத்திக்கொண்டால் தப்பிக்கலாம்.

தொழில்: சப்தம குரு லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். வர்த்தக நோக்கில் தொழிலை விரிவு செய்து அதில் ஆதாயம் காண்பீர்கள். பைனான்ஸ். அடகுக்கடை, பள்ளி, கல்லுாரிகள், ஷேர் மார்க்கெட், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆதாயம் அடைவர். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் முதலாளிகளின் பாராட்டுதலை பெறுவர். வேலை இல்லாமல் சங்கடத்தில் இருந்தவர்கள் மனதிற்குப் பிடித்த புதிய வேலை கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்: மகாவிஷ்ணு, மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள். நினைத்தவை நிறைவேறி மகிழ்வீர்கள்.

அஸ்தம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி

மனக்காரகனான சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், அறிவு மேதைகளை உருவாக்கும் புதனை ராசி நாதனாகவும் கொண்டு தனித்துவமிக்கவராக திகழ்பவர் நீங்கள். ஆறில் அமர்ந்த குருவாலும், ஐந்தில் சஞ்சரிக்கும் சனியாலும் நீங்கள் சங்கடம் அனுபவித்து வரும் நிலையில் 2022 ஏப்.13 முதல் ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தனது பார்வை பலத்தால் யோகம் அளிப்பார் என சாஸ்திரம் சொல்கிறது. இதுநாள்வரை பல்வேறு சங்கடங்களில் இருந்து உங்கள் சுயத்தை வெளிப்படுத்த முடியாமல், நினைத்ததை அடைய முடியாமல் வாழ்ந்த நிலையில் இனி மாறுதலைக் காண்பீர்கள். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதற்கான நன்மையை நீங்கள் காணப்போகிறீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறப் போகிறது. உங்கள் அந்தஸ்தும் கவுரவமும் உயர்ந்து உங்களை அதிர்ஷ்டகரமானவராக மாற்றப் போகிறது.

நிதி: லாப ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால்  வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். எதிர்ப்பாராதவற்றிலும் வருமானத்தை காண்பீர்கள். சிறிய முயற்சிக்கும் பெரிய அளவில் லாபம் உண்டாகும். இதுவரையில் கடன்களாலும் அதன் காரணமான வழக்குகளாலும் நிம்மதியற்ற நிலையில் இருந்த உங்களுக்கு அவற்றில் இருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

குடும்பம்: உங்களுடைய நட்சத்திர நாதனுக்குரிய வீட்டில்தான் குரு பகவான் உச்சமடைகிறார். அவருடைய பார்வை உங்கள் மீது பதிவதால் உங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் முன்னேற்றம் உண்டாகும். சங்கடமான நிலைமைகள் விலகி மகிழ்ச்சி காண்பீர்கள். இதுவரை நீங்கள் எதிர்பார்த்து தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும். மனதில் தைரியமும் வேகமும் தோன்றும். சகோதரர்கள் வகையில் ஆதாயம் அதிகரிக்கும். ஆனால் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது ஏதாகிலும் ஒரு வகையில் குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலையை உருவாக்கினாலும் குருவின் பலத்தால் அவற்றை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும்.

கல்வி: உங்கள் ராசிநாதனான புதன் பகவான்தான் வித்யாக்காரகன். குரு பகவானுக்கு புதன் பகையானவர் என்றாலும் குரு பகவானின் பார்வை பலத்திற்குரிய பலனை அடைவீர்கள். கல்வியில் ஆர்வம் கூடும். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். தேர்வுகளின் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகும் என்றாலும் அதிக மதிப்பெண்களைப் பெற கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் அறிவுரைகளையும் ஏற்று செயல்படுங்கள்.

பெண்கள்: குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும், வீண் விரயம் அகலும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் அழகும் புத்திசாலித்தனமும் பிரகாசிக்கும். 2 ல் சஞ்சரிக்கும் கேது உறவினர் வழியே சங்கடங்களை உருவாக்குவார். பூர்வ  சொத்துகளில் வில்லங்கம் தொடரும். பிள்ளைகளின் செயல்பாட்டால் நெருக்கடி உண்டாகும் என்றாலும் எல்லாவற்றையும் உங்கள் அறிவால் சரி செய்வீர்கள். 2022  மே 25 முதல் சனி வக்ரகதியடைவதால் இவற்றில் எல்லாம் மாற்றம் தோன்றும்.

 உடல்நிலை: 8ல் சஞ்சரிக்கும் ராகு  உடல்நிலையில் சங்கடத்தை உருவாக்கலாம். சுவாசக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, இனம்புரியாத நோய் என பிரச்னைகள் தோன்றும். சிலர் புதுவகைத் தொற்று நோய்க்கும் ஆளாகலாம் என்றாலும், ஜென்ம ராசியைப் பார்க்கும் குருவால் உடலில் புது வேகம் கூடும். எந்த நோய் வந்தாலும் சிகிச்சைகளால் சரியாகும். ஆரோக்கியமுடன் செயல்படுவீர்கள்.

தொழில்: தொழிலில் இருந்த மந்தநிலை மாறி லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வேலையில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் என மகிழ்வீர்கள். மேலதிகாரிகள், முதலாளிகள் ஆதரவாக இருப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட முயற்சித்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். அரசியல் வாதிகள் புகழடைவார்கள். முதலீட்டிற்கு மேல் லாபம் காண்பீர்கள். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு  தகுதிக்கேற்ற வேலைகள் கிடைத்து நிம்மதி காண்பர். இது உங்களுக்கு யோக காலமாகும்.

பரிகாரம்; செவ்வாய்க் கிழமைகளில் திருச்செந்துார் முருகனை வழிபட்டு வாருங்கள். நன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.

சித்திரை 1, 2 ஆம் பாதம்: துணிவால் வெல்வீர்கள்

தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும், வித்யா காரகனான புதனை ராசி நாதனாகவும் கொண்டதால் வேகமும் விவேகமும் நிறைந்தவர்களாக  இருப்பீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும் வகையில் 2022 ஏப்.13 அன்று உங்களின் 7 ஆம் வீட்டில் ஆட்சியாக சஞ்சரிக்கும் குரு அவருடைய ஸ்தான பலத்தினாலும், பார்வை பலத்தாலும் நன்மை வழங்க உள்ளார். இனி உங்களின் அந்தஸ்தில் முன்னேற்றம் தோன்றும். உங்களுடைய ஆலோசனை கேட்டு நடப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய நட்புகளால் ஆதாயம் உண்டாகும். மற்றவர் நலனுக்காக  துணிச்சலான செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்காலத்தின் மீதான சிந்தனை உண்டாகி அதை நோக்கி உங்கள் செயல்களை கொண்டு செல்வீர்கள்.

நிதி: உங்களின் மென்மையான அணுகுமுறையால் கடுமையான நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். லாப ஸ்தானத்தின் மீதான குருவின் பார்வையால் வருமானம் அதிகரிக்கும். பூமி, நிலம் வகையில் எதிர்பார்த்திருந்த லாபம் வந்து சேரும். உங்கள் நிலையை உயர்த்தும் வகையில்  தொழிலில் இருந்து வருமானம் வந்து சேரும். அரசு வகையில் ஆதாயம் அதிகரிக்கும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை வந்து சேரும். ஆலோசகர்கள் அதிகபட்ச வருமானம் காண்பார்கள். வருமானத்திற்கு வழி உண்டாவதால் குடும்பத்திற்குரிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வீர்கள்.

குடும்பம்: கணவன் மனைவிக்குள் உண்டான கருத்து வேறுபாடு மறையும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டாகும். உறவினர்கள் வருகை உண்டாகும். நவீன பொருட்களின் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியே செலவுகள் அதிகரிக்கும். உங்களின் நீண்டநாள் கனவுகளில் ஒன்று இக்காலத்தில் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் தொந்தரவுகள் வரலாம் முடிந்தவரை அவர்களை விட்டு விலகியிருங்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகளில் இக்காலத்தில் முடிவுகள் உண்டாகாது என்பதால் அதையொட்டிய முயற்சிகளை இப்போது மேற்கொள்ள வேண்டாம்.

கல்வி: பல்வேறு சூழல்கள், மனதில் உண்டான நெருக்கடிகள் போன்றவற்றால் கல்வியின்மீது உண்டான நாட்டம் குறைந்திருக்கும். 5 ல் சஞ்சரித்து வரும் சனி புத்தியில் குறைபாட்டையும் தடுமாற்றத்தையும் உண்டாக்கி வரும் நிலையில் முழு சுபரான குருவின் பார்வை உங்களுக்கு உண்டாவதால் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். முன்னேற்றம் தோன்றும். வணிகவியல், நிர்வாக மேலாண்மை, பொறியியல், வரலாறு மாணவர்கள் மேன்மை அடைவர். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் கல்வியில் செலுத்த வேண்டும். இல்லையெனில் தேர்ச்சி பெற்றாலும் கல்லுாரிகளைத் தேடி அலைய வேண்டிய நிலை உண்டாகும்.

பெண்கள்: ஏழில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் துணையின் அன்பும் அரவணைப்பும் பூரணமாக உண்டாகும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது குடும்பத்திற்குள் குழப்பம் தர முயற்சிப்பார். தாய்வழி உறவுகளின் வழியே வீண் நெருக்கடிகள், பிரச்னைகள் தோன்றலாம். இளைய தாரம், லாப ஸ்தானம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடிய 11 ஆம் வீட்டிற்கு குருவின் பார்வை உண்டாவதால் இக்காலத்தில் உண்டாகும் புதிய நட்புகளில் ஒருவர் மன ரீதியாக உங்களை நெருங்கலாம். 5 ல் உள்ள சனி பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து உங்களை யோசிக்க வைக்கலாம். சிலருக்கு பிள்ளைகளின் வழியே  பிரச்னைகள் உருவாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு அபார்ஷன் உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதார வரவு அதிகரிக்கும் என்பதால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்

உடல்நிலை: இதுவரையில் இருந்த ஆரோக்கிய நிலையில் மாறுதல் உண்டாகும். மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையும் சிலருக்கு உண்டாகும். எட்டில் சஞ்சரிக்கும் ராகு இனம்புரியாத நோய்களை உண்டாக்குவார். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்களால் பாதிக்கப்படலாம். இதனால் மனரீதியாக சங்கடங்கள் உண்டாகும். உஷ்ண நோய், வயிற்றுப் பிரச்னைகள், குடல் நோய்கள் உண்டாகி சங்கடப்படுத்தலாம். தம்பதியரில் ஒருவரிடம் உள்ள மறைமுக நோய் மற்றவரையும் தொற்றலாம் என்பதால் ஒழுக்க நிலை இக்காலத்தில் அவசியம். சாதாரண காய்ச்சல் வந்தாலும் மருத்துவரை சந்திப்பதால் பின் விளைவில் இருந்து தப்பிக்கலாம். பிள்ளைகளின் உடல் நிலையில்  கவனம் செலுத்துங்கள்.

தொழில்: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகுவும், தொழில் ஸ்தானத்தைப் பார்த்த கேதுவும் இடம் மாறி விட்டனர். 2022 ஏப்.13  முதல் தொழில் ஸ்தானத்திற்கு 11 ல் குரு சஞ்சரிப்பதுடன் லாப ஸ்தானத்தையும் அவர் பார்ப்பதால் தொழிலில்  இருந்த தடைகள் அகலும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  தொழிலில் இருந்த சட்ட சிக்கல்கள் விலகும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதால் லாபம் உண்டாகும். வங்கி, வட்டித்தொழில், ஆபரணக் கடைகள், பதிப்பாளர்கள், அச்சகம் நடத்துவோர் இக்காலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களை தவிர்க்கவும். அந்நிய மொழி, மதத்தினருடன் வரவு செலவு வேண்டாம். அரசு பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர்.  வீண் பிரச்சனைகள், மெமோ என்பனவற்றில் இருந்து விடுபடுவீர்கள். தனியார் நிறுவன  பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் முடிவு சாதகமான பலனைத் தரும்.

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை மனதில் நினைத்து அன்றாடப்பணிகளில் ஈடுபடுங்கள். சங்கடங்கள் யாவும் தீரும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar