ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரை அடுத்த சிக்கூரில் 400 ஆண்டுகள் பழமையான பசுவேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் பூசை செய்வது தொடர்பாக பூசாரிகளுக்குள் பிரச்சினை இருந்தது. நேற்று கடம்பூர் போலீசார், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், மற்றும் ஊர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் நேற்று முதல் திறக்கப்பட்டது.