Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தவெளி அம்மனுக்கு பால் குடம் ... நாகம்மன் கோவில் விழா : வளைகாப்பு அலங்காரத்தில் அம்மன் நாகம்மன் கோவில் விழா : வளைகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனுார் அஸ்திரபுரீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆனுார் அஸ்திரபுரீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 மே
2022
12:05

திருக்கழுக்குன்றம்:ஆனுாரில், அஸ்திரபுரீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார் பகுதியில், சவுந்தரநாயகி உடனுறை அஸ்திரபுரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிவபெருமான், அம்பாள் அருள் பாலிக்கின்றனர். யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.

இக்கோவிலில் வழிபாடு நடத்தினால், வழக்கு, குடும்ப சிக்கல்கள் தீர்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர்.சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை, அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தேவராஜன், தலைவராக பொறுப்பு வகிக்கும், ஆனுார் கிராம முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், சமீபத்தில் புனரமைத்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன், கும்பாபிஷேகத்தை நடத்தியது. விசேஷ ஹோமம், நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, காலை 7:20 மணிக்கு, விமானங்கள், மூலவர், உற்சவர், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகத்தை நடத்தியது. அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோவில் புனரமைப்பு அறக்கட்டளை நிர்வாகி தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனுார், பொன்விளைந்தகளத்துார், வல்லிபுரம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்தனர். இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின், பஞ்சமூர்த்திகள் வீதியுலா சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar