Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பராயன் சாமி கோவில் ... ராமலிங்க சவுண்டம்மன் கோவில் விழா : கரகம் எடுத்து, உடலில் கத்தி போட்டு வந்த பக்தர்கள் ராமலிங்க சவுண்டம்மன் கோவில் விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பணிகள் முடிந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் எப்போது; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
திருப்பணிகள் முடிந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் எப்போது; பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

24 மே
2022
05:05

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் மிகவும் பழமையான கோயிலான சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையில், எப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 1984 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கடந்த, 38 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோவில் தலைமை கோவிலாகவும், வனபத்ரகாளியம்மன் கோவில், நகரிலுள்ள பிற கோவில்கள், இதன் உப கோயில்களாக இருந்தன. மேட்டுப்பாளையம் தாலுகா, குன்னூர், கோத்தகிரி ஆகிய ஊர்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று, முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.

காலப்போக்கில் இக்கோவிலை பராமரிக்காததால் சுவர்கள் சிதிலம் அடைந்தன. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது. இந்நிலையில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தும்படி, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, 2015ம் ஆண்டு இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கின. கடந்த, 7 ஆண்டுகளாக திருப்பணிகள் செய்யப்பட்டு வந்தன. மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம் என பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இரு பக்கம் சிவன், அம்பாள் சன்னதிகளும், முன்புறம் தியான மண்டபம், நவகிரக சன்னதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடு கோவில்களில் உள்ள மூலவர் சுவாமி சிலைகள் போன்று, சோபன மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம், நுழைவாயில் கோபுரம் என அனைத்து திருப்பணிகளும் செய்துமுடித்து, கோபுரத்திற்கும், சிலைகளுக்கும் வர்ணங்கள் அடிக்கப்பட்டுள்ளன. திருப்பணிகள் முடிந்து, 6 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் கும்பாபிஷேகம் நடை பெறாமல் உள்ளது. பழமை வாய்ந்த சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம், எப்போது நடைபெறும் என மேட்டுப்பாளையம் நகர முருக பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, அனைத்து திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்பு, கும்பாபிஷேகம் தேதி முடிவு செய்யப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar