ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா : பக்தர்கள் பால்குடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 04:06
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் பால்குடம் அக்னிசட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 6 ல் கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பூப்பல்லக்கு நடந்தது. நாளை (ஜூன் 15) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். சன்மார்க்க சங்கத்தினர் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கினர்.