Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டியாற்றில் மயிலம் சுப்ரமணிய ... வீரவநல்லுார் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் வீரவநல்லுார் திரவுபதி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் ஆடிப்பெருக்கு; தாமிரபரணிக்கு சீர்வரிசை
எழுத்தின் அளவு:
நெல்லையில் ஆடிப்பெருக்கு; தாமிரபரணிக்கு சீர்வரிசை

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
12:08

திருநெல்வேலி: நெல்லையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு சீர்வரிசை வழங்குதல் மற்றும் நதிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு சீர்வரிசை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக நெல்லை ்­ஷன் சிருங்கேரி மடத்தில் இருந்து பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. தாமிரபரணி நதியை அம்பாளாக பாவித்து, கருப்பு வளையல், கருகுமணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை தாமிரபரணி நதிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தைப்பூச மண்டபத்தில் நடந்தது. வைதீகர்கள் பாஸ்கர வாத்யார், சந்தோஷ் வாத்யார், சீதாராமன் வாத்யார் மற்றும் தபண்டிதர்கள் தமந்திரங்களை சொல்லி தாமிரபரணி நதிக்கு பூஜைகள் செய்தனர்.

தாமிரபரணி அஷ்டோத்ர மந்திரங்களை சொல்லி பூஜைகள் செய்தனர். நதிக்கு பலவிதமான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பெண்களின் ஆரத்தி வைபவம் நடந்தது.நதிக்கு சிறப்பு பூஜை செய்த வேதபண்டிதர் பாஸ்கரவாத்யார் கூறுகையில், ‘தாமிரபரணி நதிக்கு (விசாகம் நட்சத்திரம்) அந்தஸ்து உண்டு. மகாநதி என தாமிரபரணியை வேத வியாசர் பேற்றுகிறார். திரேதா யுகத்திலும் தாமிரபரணியின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையில் பல கோயில்கள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தாமிரபரணி நதியில் தினந்தோறும் நாமும் நீராடுவதோடு, குழந்தைகளையும் நீராடச் செய்து கோயில்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். நதியின் பெமைகளையும், சிறப்புகளையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar