Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரதணிகாசல சிவசுப்ரமணிய சுவாமி ... முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோழிகுத்தி 14 அடி உயர வானமுட்டி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோழிகுத்தி 14 அடி உயர வானமுட்டி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 செப்
2022
10:09

மயிலாடுதுறை: கோழிகுத்தியில் அமைந்துள்ள 14 அடி உயர ஒரே அத்தி மரத்தாலான வானமுட்டி பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த கோவிலில் பிப்பல மகரிஷிக்கு  பெருமாள் விஸ்வரூப காட்சி கொடுத்த தலமாகும். சனி கவசம் பாடப்பட்ட இந்த கோவிலில் பெருமாளை வழிபட்டால்  பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கோடிஹத்தி என்ற பெயர் பிற்காலத்தில் மருவி கோழி குத்தி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த  வானமுட்டி பெருமாள் கோவிலில்  மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள்  புறப்பட்டு மல்லாரி இசையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கலசங்களை அடைந்தது. அங்கு பட்டாச்சாரியார்கள் புனித நீரை ராஜகோபுரம் மற்றும் பெருமாள், தாயார் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் ஊற்றி சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து வைக்கப்பட்டது. உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  கும்பாபிஷேக விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர், சென்னை மகாலட்சுமி, தொழிலதிபர்கள் டெக்கான் மூர்த்தி, விஜயகுமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷமிட்டபடி கும்பாபிஷேகத்தை கண்டு, பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி தலைமையிலானூர் செய்திருந்தனர். மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்த ராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar