Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி உபகோவில் நிலத்தை மோசடியாக ... திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உழவாரப்பணி திண்டுக்கல் அபிராமி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா
எழுத்தின் அளவு:
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

பதிவு செய்த நாள்

15 செப்
2022
11:09

ஏரல்: ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏரல் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு கொடை விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரம் நடக்கிறது .


முக்கிய விழாவான கொடை விழா அன்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், வில்லிசை, மதியம் அம்பாளுக்கு மகாஅபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, தொடர்ந்து அம்பாள் கேடய சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு ரகாட்டம் மற்றும் அம்மனுக்கு இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து மேளவாத்தியங்களுடன் அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதல், தொடர்ந்து அம்பாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சகல மேளவாத்தியங்களுடன் கரகாட்டம் வாணவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி உலா செல்லுதல், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் சென்னை வாழ் சங்கத்தினர் கோவை, மும்பை வாழ் உறவின் முறையினர் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின் முறையினர், பஜார் வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கொடை விழா நிகழ்ச்சியில் காலை, மதியம் அம்பாள் தீபாராதனை, இரவு சென்னைவாழ் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் உறவின்முறை நாடார் சங்கம் சார்பில் மாபெரும் இன்னிசை கச்சேரி, இன்று (15ம் தேதி) இரவு மும்பைவாழ் சங்கத்தின் சார்பில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, நாளை கே.சின்னத்துரை அன்கோ, வரகயிலமணி நாடார் சன்ஸ், ராமகிருஷ்ண நாடார் சன்ஸ், நவமணி ரெடிமேட் சார்பில் மங்கையர்கரசியின் சொற்பொழிவு, 17ம் தேதி கோவைவாழ் உறவின்முறையின் சார்பில் மேஜிக் & கலக்கல் கதம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ம் தேதி இரவு உபயதாரர்கள் சார்பில் மாபெரும் இன்னிசை கச்சேரியுடன் இந்த ஆண்டு கொடைவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar