Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி உபகோவில் நிலத்தை மோசடியாக ... திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உழவாரப்பணி திண்டுக்கல் அபிராமி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா
எழுத்தின் அளவு:
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

பதிவு செய்த நாள்

15 செப்
2022
11:09

ஏரல்: ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏரல் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு கொடை விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரம் நடக்கிறது .

முக்கிய விழாவான கொடை விழா அன்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வருதல், வில்லிசை, மதியம் அம்பாளுக்கு மகாஅபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாராதனை, தொடர்ந்து அம்பாள் கேடய சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு ரகாட்டம் மற்றும் அம்மனுக்கு இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து மேளவாத்தியங்களுடன் அம்பாள் கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதல், தொடர்ந்து அம்பாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சகல மேளவாத்தியங்களுடன் கரகாட்டம் வாணவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி உலா செல்லுதல், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. கொடை விழாவில் சென்னை வாழ் சங்கத்தினர் கோவை, மும்பை வாழ் உறவின் முறையினர் ஒன்பது தெரு இந்து நாடார் உறவின் முறையினர், பஜார் வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கொடை விழா நிகழ்ச்சியில் காலை, மதியம் அம்பாள் தீபாராதனை, இரவு சென்னைவாழ் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் உறவின்முறை நாடார் சங்கம் சார்பில் மாபெரும் இன்னிசை கச்சேரி, இன்று (15ம் தேதி) இரவு மும்பைவாழ் சங்கத்தின் சார்பில் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, நாளை கே.சின்னத்துரை அன்கோ, வரகயிலமணி நாடார் சன்ஸ், ராமகிருஷ்ண நாடார் சன்ஸ், நவமணி ரெடிமேட் சார்பில் மங்கையர்கரசியின் சொற்பொழிவு, 17ம் தேதி கோவைவாழ் உறவின்முறையின் சார்பில் மேஜிக் & கலக்கல் கதம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ம் தேதி இரவு உபயதாரர்கள் சார்பில் மாபெரும் இன்னிசை கச்சேரியுடன் இந்த ஆண்டு கொடைவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar