Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானையின் உடல்நிலை; அஸ்ஸாம் அதிகாரிகள் குழு ஆய்வு ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரோவில்லில் 4 புராதன சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
ஆரோவில்லில் 4 புராதன சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2022
11:09

சென்னை : விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் தொன்மையான நான்கு சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அமைந்துள்ள மரோமா நிறுவனத்தில், தொன்மையான உலோக சிலைகள், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.அதைத் தொடர்ந்து, விற்பனை நிலையத்தை சோதனை செய்ய, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் அனுமதி பெறப்பட்டது. பின், திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., கதிரவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர், மரோமா நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதில், தொன்மையான சிவகாமி அம்மன் உலோக சிலை, ஆஞ்சநேயர் கற்சிலை, நாக தேவதை கற்சிலை, இடது பக்கம் உடைந்த நிலையில் மார்பளவுக்கு மேல் உள்ள சிவன் கற்சிலை ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.இந்த நான்கு சிலைகளுக்கும் எந்தவித ஆவணமும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. எந்த கோவிலுக்கு சொந்தமான சிலைகள் என விசாரணை நடந்து வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.நான்கு தொன்மையான சிலைகளை மீட்ட தனிப்படையினரை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி ஆகியோர்பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar