அவிட்டம் - 3, 4: எளிதில் மற்றவரை வசீகரிக்கும் உங்களுக்கு இந்த மாதம் காரியங்களில் வெற்றி ஏற்படலாம். பணவரவு அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்திசாதுாரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு பாக்கிகள் வசூலாகும். அரசியல்துறையினர் கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பரிகாரம்: ஹயக்ரீவரை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுவலம் உண்டாகும். சந்திராஷ்டமம்: அக். 21, 22 அதிர்ஷ்ட நாள்: அக். 30
சதயம்: வாழ்க்கையில் முன்னேற்றமடையை திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிக்க ஆதரவு கிடைக்கும். பணவரவு குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்னைகள் தலைதுாக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். மனதில் வீண்குழப்பம் உண்டாகும். கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கேட்டு சிலர் வரக்கூடும். முயற்சிகள் நல்ல பலன் தரும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். வாக்குவாதங்கள் நீங்கும்.மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பரிகாரம்: ரங்கநாதரை வணங்கி வர பிரச்னைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். சந்திராஷ்டமம்: அக். 22, 23 அதிர்ஷ்ட நாள்: அக். 31
பூரட்டாதி - 1, 2, 3: திறமையை கொண்டு முன்னேறும் உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்னை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்னை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரவு கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பரிகாரம்: ஆலங்குடி குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்னை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். சந்திராஷ்டமம்: அக். 23, 24 அதிர்ஷ்ட நாள்: நவ. 1
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »