Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறந்தது.. மேல்சாந்திகள் ... சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை: கேரள அரசு சபரிமலையில் பெண்களுக்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கியது: குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மண்டலகாலம் தொடங்கியது:  குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

18 நவ
2022
07:11

சபரிமலை: சபரிமலையில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நேற்று அதிகாலை நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கியது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து ஸ்ரீகோயிலில் விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார், பின்னர் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கணபதிேஹாமம் நடத்தினார். 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெற்றது.

பகல் 12:00 மணிக்கு களாபாபிஷேகம் நடைபெற்ற பின்னர் உச்சபூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு தீபாராதனையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 10:00 மணிக்கு அத்தாழபூஜையும் நடைபெற்றது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி வரும் 40 நாட்களிலும் இதுபோன்ற பூஜைகள் நடைபெற்று 27–ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். நேற்று அதிகாலை நடைதிறந்த போது 18–ம் படியேற நீண்ட கியூ காணப்பட்டது. அதிகாலை 3.35 மணி முதல் நெய்யபிஷேகம் நடைபெற்றதால் பக்தர்கள் வசதியாக அபிஷேகம் செய்து மலை இறங்கினர். பக்தர்கள் வசதிக்காக சன்னிதானத்தில் இரண்டு இடங்களில் இ காணிக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் அலைபேசியில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் காணிக்கையாக செலுத்தலாம். இதனை தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar