Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... சிவகாசி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிவகாசி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் நேரம் எப்படி இருக்கும்?
எழுத்தின் அளவு:
சோபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் நேரம் எப்படி இருக்கும்?

பதிவு செய்த நாள்

13 ஏப்
2023
08:04

சோபகிருது ஆண்டு உத்தராயண புண்ணிய காலம், சித்திரை 1, (2023 ஏப்.14) வெள்ளிக்கிழமை, தேய்பிறை நவமி, திருவோண நட்சத்திரம், கடக லக்னம், மீன நவாம்சம் கூடிய சுப நாளில் மதியம் 2:05 மணிக்கு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.

ஆண்டு வெண்பா
சோப கிருது தன்னில் தொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோப மகன்று குணம் பெருகும்- சோபனங்கள்
உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகும் என்றே யுரை.
பழமையான இந்த உலகம் செழிக்கும். பொறாமை, கோபம், ஆணவம் நீங்கி நற்பண்புகள் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழை பெய்யும். மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வர்.

பொது பலன்கள்: வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி கனரகத் தொழில்கள் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவர். உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். நவீன ஏவுகணைகள் , புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் வாங்கப்படும். நம் நாட்டின் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பால் ஏற்றுமதி பெருகும். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்.  

கிரக பாதசாரம்

கிரகம் நட்சத்திரம் சாரம்

லக்னம் - மகம்1 - கேது
சூரியன் - அசுவினி 1 - கேது  
சந்திரன் - திருவோணம் 1 - சந்திரன்
செவ்வாய் - திருவாதிரை 3- ராகு  
புதன் (வ) - அசுவினி 4
குரு - ரேவதி 4 - புதன்
சுக்கிரன் - கார்த்திகை 4 - சூரியன்
சனி - அவிட்டம் 3- செவ்வாய்
ராகு - அசுவினி 3    - கேது

கேது - சுவாதி 1 - ராகு


வளமான வாழ்வுக்கு...: தமிழ்ப்புத்தாண்டன்று விஷுக்கனி தரிசனம் செய்வது சிறப்பாகும். இதற்காக பூஜையறையில் மாக்கோலமிட்டு மரப்பலகை மீது நிலைக்கண்ணாடியை வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்றுவார்கள். பூக்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பச்சரிசி, பருப்பு வகைகளை தட்டுகளில் நிரப்பி வைப்பர். மா, பலா, வாழை, வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது மஞ்சள்நிற செவ்வந்தி, தென்னம்பூக்களையும் அடுக்குவர். அதிகாலையில் இதைக்  காண்பதற்கு ‘விஷுக்கனி தரிசனம்’ என்று பெயர். அதன்பின் பெற்றோரிடம் ஆசி பெற்று பணம் பெறுவர். இதனைக் ‘கை நீட்டம்’ என்பர். இப்படி செய்தால் ஆண்டு முழுவதும் வளமான வாழ்க்கை அமையும்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar