Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : குருப்பெயர்ச்சி பலன் .. ... துலாம் : குருப்பெயர்ச்சி பலன் .. கடன் பிரச்னை குறையும் துலாம் : குருப்பெயர்ச்சி பலன் .. கடன் ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
கன்னி : குருப்பெயர்ச்சி பலன் .. திறமை வெளிப்படும்
எழுத்தின் அளவு:
கன்னி : குருப்பெயர்ச்சி பலன் .. திறமை வெளிப்படும்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
01:04

உத்திரம்: குருபார்வையால் நன்மை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பவர்கள். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான உங்களுக்கு குருபகவான் நட்புக் கிரகமாவார். ஒன்றாம் பாதத்திற்கு ஒன்பதாமிடத்திற்கும், மற்ற மூன்று பாதத்திற்கு மறைவு ஸ்தானத்திற்கும் மாறுகிறார். ராகு, சூரியன் இரு கிரகங்களால் ஏற்படும் தோஷத்தை குருவின் சேர்க்கையால் பெருமளவு குறையும். குரு பார்க்க கோடி நன்மை என்பது பெரியவர்களின் அனுபவ வாக்கு. உடல்நலன் சிறப்பாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் செலவைக் கட்டுப்படுத்துவீர்கள். மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திருத்தலங்களை தரிசனம் செய்வீர்கள். மகான்களில் ஆசி கிடைக்கும்.  கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும்.
பணியாளர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
குடும்பத்தில் வருமானம் திருப்தியளிக்கும். உத்திரம் முதல் பாதத்திற்கு பாக்கிய ஸ்தான குருவால் பலவழிகளிலும் பணம் கைக்கு வரும். இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். சுபவிரயச் செலவுகள் அதிகரிக்கும்.  உத்திர நட்சத்திரத்தின் மற்ற பாதங்களுக்கு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும். களத்திர ஸ்தானத்திற்கு ராகு மாறுவதால் மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். மனைவி, குழந்தைகளின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை தவிர்ப்பது அவசியம். யோசித்து மென்மையான நல்ல வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவது அவசியம்.
பெண்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்னைகளையும் தீர்த்து விடுவர். வெளியூர் பயணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். .
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வருவர். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவர்.  விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதிபதி புதன் ராகுவுக்கு கேந்திரம் பெறுவதால் மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வர். கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: ரங்கநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.


அஸ்தம்: திறமை வெளிப்படும்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினாறாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
புதன் - சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் மனம் சார்ந்து முடிவுகளை எடுப்பவர்கள்.
ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என யோசித்து செய்யும் உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருபகவானை தவிர மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தாலும் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். வீடு, மனை ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.
உங்களுக்கு வாக்குவன்மை அதிகம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். மனதில் துணிவும், உற்சாகமும் பிறக்கும். நல்லவர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் தேவை. விடாமுயற்சி, கடின உழைப்பால் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.
எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் ஒவ்வொன்றாக விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். பூர்வீகச் சொத்துகளில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகளில் முடிவு சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பம் உருவாகும். குறைந்த உழைப்பிலும் நிறைந்த ஆதாயம் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்க பெறுவீர்கள். மறைமுகப் போட்டிகள் அகலும். தடைப்பட்ட பணஉதவி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உகந்த காலகட்டமாகும். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் குறையும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருக்க வாய்ப்பில்லை. சிலர் அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். ஆனாலும் உங்கள் பணிகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். சக ஊழியர்களை நம்பி முக்கிய பணிகளை ஒப்படைக்க வேண்டாம்.
குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து இணைவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.  மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
பெண்களுக்கு போட்டி, எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். ஆடம்பர வகையில் செலவழிப்பர். கடந்த கால முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் காண்பர். அதே சமயம் கணவருடன் வாக்கு வாதம் ஏற்படலாம். நிதானத்துடன் நடப்பது நல்லது. ஆடை, அணிகலன்களை வாங்குவர். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாதுர்யமான பேச்சின் மூலம் வருமானம் கூடும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவால் நன்மையும், உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.  மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தடைகள் விலகும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலர் படிப்புடன்  விளையாட்டு, கலை போட்டிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றி காண்பர். அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: வராகியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.


சித்திரை: சுபச்செலவு உண்டாகும்

குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினைந்தாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் தைரியமானவர்கள். அதிகார தோரணையுடன் காணப்படும் உங்களுக்கு முதல் இரண்டு பாதத்திற்கு குரு பகவான் மறைவு ஸ்தானத்திற்கு மாறுகிறார். மற்ற இரண்டு பாதத்திற்கு குரு பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். நல்ல பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனிவழி என்று செயல்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தியில் தெளிவு உண்டாகும். நல்லது எது, கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் வாழ்வில் வெற்றி காண்பீர்கள். வழக்கு விவகாரங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பணவரவு கூடும். செயலில் திறமை அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்று மகிழ்வீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.
குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபச்செலவு உண்டாகும்.  
தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது பற்றிய எண்ணம் மேலோங்கும். அதற்கான நிதியுதவி தாராளமாகக் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆதரவும், ஆலோசனையும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தமான தொழில்கள் சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வளர்ச்சிப்பாதையில் பயணிப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நவீன உத்திகளை கையாள்வீர்கள். பழைய கடன் அடைபடும்.
பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி விரைவில் கிடைக்கும். பணியிட மாற்றம் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்படும். வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். சிலருக்கு பதவி, ஊதிய உயர்வும் கிடைக்கும்.
சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவர்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த செயல்கள் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ப புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு சீரான முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடினாலும் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களால் இனிய அனுபவம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.  
அரசியல்வாதிகளுக்கு பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குருபார்வையால் பணவரவு அதிகரிக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். மக்கள் மத்தியில் மரியாதை கூடும். எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பீர்கள். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்கள் வகையில் பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.  தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் ஆதரவும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். படிப்புடன் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிறன்று வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றி பெறும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar