Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி ... பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை; புதையலாக இருக்கலாம் என சந்தேகம் பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2023
01:07

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 29ம் தேதியும்,தேரோட்டம் ஆக.1ம் தேதியும்,ஆக.2ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்க்கான திருவிழா துவக்கமாக இன்று காலை 6:00 மணியிலிருந்து 7:25 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை அர்ச்சகர் கோபி தலைமையிலான அர்ச்சகர்கள் சுவாமிகளுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சர்வ அலங்காரங்கள் செய்த பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். விழா நாட்களின் போது சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் தினந்தோறும் பரங்கி நாற்காலி, ஹனுமார், கருடன், சேஷம், பூப்பல்லாக்கு, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பின்னர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 29ம் தேதி இரவு 7:35 மணிக்கும், ஆக.1ம் தேதி தேரோட்டமும், 2ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4ம் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன் அர்ச்சகர் முத்துசாமி ஐயங்கார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar