Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்கமே வைரமே உண்மை சொல்லும் உத்தமர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறவாத வரம் வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2023
05:07

 இப்போதுள்ள  இயந்திர வாழ்க்கையில் பலரும் தினமும் கோயிலுக்கு போகவும், ஆன்மிக சொற்பொழிவு கேட்கவும், சத்சங்கங்களில் ஈடுபடவும், கடவுளை நினைக்கவே நேரம் இல்லையே என மனம் வருந்துவர். அப்படி பட்டவர்களுக்கான தீர்வு தான் இது. சிவனடியார்களான நாயன்மார்கள் வரலாற்றை கூறும் பெரியபுராணத்தில் ஒருவர் துாய அன்போடு எங்கு வேண்டுமானாலும் கடவுளை வழிபடலாம் என்கிறது. இதை தான்

‘நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத வுணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்’

என இவ்வாறு இருப்பவர்களே கடவுளின் நாமத்தை எப்போதும் மறவாத அடியார்கள் என பாடியுள்ளார் சேக்கிழார். இவர் சொல்லிய வழிகளை பின்பற்றி ஆன்மிகத்திற்கு பலம் சேர்த்தவர்களே அருளாளர்கள். அவர்களுள் ஒருவரான வரதுங்கர்

 ‘இருக்கினும் நிற்கும் போதும்
    இரவுகண் துயிலும் போதும்,
பொருக்கென நடக்கும் போதும்
   பொருந்தியூண் உய்க்கும் போதும்,
முருக்கிதழ் கனிவாயாரை
  முயங்கி நெஞ்சழியும் போதும்,
திருக்களாவுடைய நம்பா
  சிந்தனை உன்பால் தாமே’என பாடி இருக்கிறார்.
 எச் செயலில் ஈடுபட்டாலும் கடவுளின் திருநாமத்தை நினைக்க வேண்டும் என்கிறார்.  இதே கருத்தை தான் முருகபக்தர்களில் ஒருவரான பாம்பன் சுவாமிகள்
‘ எழும் போது வேலும் மயிலும்  
   என்பேன்,எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும் வேலும் மயிலும்
  என்பேன்,தொழுது உருகி
அழும் போதும் வேலும் மயிலும்
  என்பேன்,அடியேன் உடலம்
விழும் போதும் வேலும் மயிலும்
  என்பேன், செந்தில் வேலவனே’ என்று பாடியுள்ளார்.
இப்படி  வாழ்பவர்கள் சீரும் சிறப்பும் அடைவர். இதைத்தான் ‘அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே’என்கிறார் அபிராமி பட்டர்.
இவ்வுலகில் ஒவ்வொருவரும் தன்னை தானே செம்மைப்படுத்திக் கொள்ள கடவுளின்  திருநாமங்களை எந்த செயல் செய்தாலும் நினையுங்கள். சொல்லுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar