Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைபெய்து விவசாயம் செழிக்க கஞ்சி ... ஆவணி பவுர்ணமி; மௌனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு ஆவணி பவுர்ணமி; மௌனகுரு சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா ரத்து: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா ரத்து: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2023
05:08

நாகர்கோவில்; பத்மநாபபுரம் அரண்மனையில் ஓண கொண்டாட்டத்தை கேரளா அரசு ரத்து செய்ததை கண்டித்து அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது. 1956- ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி பத்மநாபபுரம் அரண்மனை இன்னும் கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கேரள அரசு ஊழியர்கள் பணி புரிகின்றனர். கேரளாவில் திருவோண பண்டிகை 10 நாட்கள் அரசு சார்பில் கொண்டாடப்படும் போது பத்மநாபபுரம் அரண்மனையிலும் அது கொண்டாடப்பட்டு வந்தது. இதில் அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொள்வர். ஆனால் இந்த ஆண்டு நிதி நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி கேரள அரசு இங்கு ஓண கொண்டாட்டத்தை ரத்து செய்தது. இதனால் அத்தப்பூ உள்ளிட்ட எந்த நிகழ்வும் இங்கு நடைபெறவில்லை. திருவோண நாளில் அரண்மனை அடைக்கப்பட்டு இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரண்மனையை தன்வசம் வைத்துள்ள கேரள அரசு பாரம்பரிய முறைப்படி நடைபெறும் ஓண விழாவை ரத்து செய்தது தவறு என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை கண்டித்து இன்று அரண்மனை வாசல் முன்பு பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையில் அடுத்த ஆண்டு முதல் பத்மநாபபுரம் அரண்மனையில் வழக்கம் போல் ஓண பண்டிகை கொண்டாடப்படும் என்று கேரள அரசு விளக்கமளித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஆக. 29) நடக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar