Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலில் ... ‘அ’னா … ‘ஆ’வன்னா… ; அக்.24ல் தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சி முன்பதிவு தொடக்கம் ‘அ’னா … ‘ஆ’வன்னா… ; அக்.24ல் தினமலர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா விழா; மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு
எழுத்தின் அளவு:
தசரா விழா; மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2023
11:10

மைசூரு: தசராவை ஒட்டி, மைசூரு அரண்மனையில் நேற்று தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி, மைசூரில் பத்து நாட்கள் நடக்கும், தசரா உலகப்புகழ் பெற்றது. மன்னர் காலத்தில் இருந்தே , தசரா வெகு விமரிசையாக

கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னர் காலத்தில் தசராவை ஒட்டி, தங்கம் , வெ ள்ளி, வைரம், நவரத்தினங்களால் ஆன சிம்மா சனத்தில் அமர்ந்து, பொதுமக்கள் குறைகளை மன்னர்கள் கேட்பர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, கர்நாடகா தனி மாநிலமாக உருவெடுத்த பின்னர், சிம்மாசனம் அரசு சொத்தாக மாறியது. மைசூரு அரண்மனையின் கடைசி மன்னர் ஜெய சாமராஜா உடையார் காலத்தில், சிம்மாசனம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிம்மாசனத்தை ஒன்பது பாகங்களாக பிரித்து, மைசூரு அரண்மனையின் ஒரு அறையில் வைத்து, அரண்மனை நிர்வாக அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா நடக்கும் போது, சிம்மாசனத்தின் பாகங்கள் வெளியே எடுக்கப்பட்டு ஜோடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான தசராவை முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் உள்ள , அம்பா விலாஸ் தர்பார் ஹாலில், நேற்று காலை 8:00 மணியில் இருந்து 10:00 ம ணி வரை சண்டி ஹோம் , கணபதி ஹோம் , சாமுண்டீஸ்வரி பூஜை , நவ கிரஹபூஜை நடத்தப்பட்டது. அதன்பின், சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணி துவங்கியது. 


அரண்மனையின் மகாராணி பிரமோதா தேவி, இளைய மன்னர் யதுவீர், மைசூரு கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானுாத், அரண்மனை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், கண்காணிப்பில் சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. மதியம் 1: 00 மணிக்கு சிம்மாசனம் ஜோடித்து முடிக்கப்பட்டது. மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா கெஜ்ஜஹள்ளி கிராமத்தின் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர், சிம்மாசனத்தை ஜோடித்தனர். அதன் பின்னர் சிம்மாசனம் துணியால் மூடி வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி சிம்மாசனத்திற்கு, இளைய மன்னர் யதுவீர் சிறப்பு பூஜை செய்வார். அதன்பின்னர் காலை 10:00 மணி முதல் காலை 10:30 வரை ; மாலை 5:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை , சிம்மாசனத்தில் அமர்ந்து, ‘தனியார் தர்பார்’ நடத்துவார். இந்நிகழ்ச்சி 23ம் தேதி வரை தினமும் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar