Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்; தங்க ... சாய் பாபா கோவிலில் நவராத்திரி நவ சண்டி ஹோமம் சாய் பாபா கோவிலில் நவராத்திரி நவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் நவராத்திரி வழிபாடு; மலையேற அனுமதிக்காததால் மனவேதனையுடன் திரும்பிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் நவராத்திரி வழிபாடு; மலையேற அனுமதிக்காததால் மனவேதனையுடன் திரும்பிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 அக்
2023
02:10

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணம் கூறி வனத்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் முடியாமல் ஏராளமான வெளியூர் பக்தர்கள் மனவேதனையுடன் திரும்பிச் சென்றனர்.

இக்கோயிலில் நவராத்திரி திருவிழா அக்.15 முதல் துவங்கி 24 வரை நடக்கிறது. இதற்காக அக் 22, 23, 24 ஆகிய நாட்களில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இரவு தங்க அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் 10 நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவராத்திரி திருவிழா தினமும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடப்பதால் இரவில் மலையில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென, திருவிழா நடத்தும் ஏழூர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் வனத்துறை யினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அக்.22,23,24 ஆகிய 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம். ஆனால் இரவில் தங்க அனுமதி கிடையாது என வனத்துறை மீண்டும் தெரிவித்தது. இந்நிலையில் ஏழூர் சாலியர் சமுதாயத்தின் சார்பில், கோயிலில் இரவில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இறுதியான உத்தரவுகள் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அக். 22, 23, 24 தேதிகளில் பக்தர்கள் மலையேற அனுமதித்த தனது உத்தரவை ரத்து செய்து புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் குமார் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவு மதுரை, விருதுநகர் கலெக்டர்கள், அறநிலையத் துறை இணை இயக்குனர், வனச்சரகர்கள், நவராத்திரி குழு தலைவர் சடையாண்டி ஆகியோர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே தெரிவித்த வனத்துறையின் அறிவிப்பினை நம்பி நேற்று காலை 6:00 மணி முதல் ஏராளமான வெளியூர் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். ஆனால், அவர்களை மலையேற வனத்துறை மற்றும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல மணி நேரம் காத்திருந்த காத்திருந்த வெளியூர் பக்தர்கள் மிகுந்த மனவேதனையுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் தாணிப்பாறைக்கு செல்லும் வத்திராயிருப்பு விலக்கு ரோடு மற்றும் மகாராஜபுரம் விலக்கு வழிகளிலும், மலை அடிவாரத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கோயிலுக்கு வந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ ... மேலும்
 
temple news
வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar